பில்கிஸ் பானுவின் படம் எடுக்க முடியவில்லை: கங்கனா தகவல்!

59பார்த்தது
பில்கிஸ் பானுவின் படம் எடுக்க முடியவில்லை: கங்கனா தகவல்!
ஓடிடி தளங்களில் இருந்து ஆதரவு இல்லாததால் பில்கிஸ் பானுவின் திரைப்படம் எடுக்க முடியவில்லை என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். 2002ஆம் ஆண்டு குஜராத் கோத்ரா கலவரத்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பில்கிஸ் பானுவின் வழக்கை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் எடுக்க நடிகை கங்கனா ரனாவத் தயாராகி வந்தார். இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் தயாராக இருப்பதாகவும், ஆனால் நெட்ஃபிக்ஸ் மற்றும் பிரைம் வீடியோ போன்ற ஓடிடி தளங்களின் ஆதரவு இல்லாததால் அதை உருவாக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார். கலவரத்தின் போது ஐந்து மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானுவை பலாத்காரம் செய்து அவரது குடும்பத்தினரைக் கொன்ற 11 குற்றவாளிகளை விடுதலை செய்த குஜராத் அரசின் முடிவை உச்சநீதிமன்றம் கடந்த திங்களன்று செல்லாது என தீர்ப்பளித்தது.

தொடர்புடைய செய்தி