தஞ்சாவூர் பட்டுக்கோட்டை அருகே பூவாலூர் கிராமத்தில் மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதல் திருமணம் செய்த இளம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை
பெருமாள் - தாய் ரோஜா கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரையும் காவல்துறையினர் பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளனர். நேற்று இளம்பெண்ணின் பெற்றோர் உள்பட 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், இன்று இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதல் திருமணம் செய்ததால் தனது மகளை பெற்றோரே கொன்றது விசாரணையில் தெரியவந்தது.