சென்னையில் ரயில் என்ஜின் தடம் புரண்டது

63பார்த்தது
சென்னையில் ரயில் என்ஜின் தடம் புரண்டது
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் என்ஜின் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து எழும்பூர் சென்ற ரயில் என்ஜின் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. எழுப்பூர் ரயில் நிலைய நடைமேடையை நோக்கி வந்தபோது, 50 மீட்டருக்கு முன்பாக 2 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின. தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்ட ரயில் என்ஜினை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ரயில் என்ஜின் தடம்புரண்டதால் ரயில் போக்குவரத்து பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

தொடர்புடைய செய்தி