அரசு உறுதிமொழிக் குழு ஈரோட்டில் ஆய்வு

77பார்த்தது
அரசு உறுதிமொழிக் குழு ஈரோட்டில் ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுவினர் ஈரோடு மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள 1,500 மெட்ரிக் டன் மாட்டுத்தீவனம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை பார்வையிட்டு அங்கு உற்பத்தி செய்யப்படும் தீவனங்கள் மற்றும் அதன் விநியோகம் குறித்து கேட்டறிந்தனர். இந்த ஆய்வின் போது குழு உறுப்பினர்கள் மற்றும் எம்எல்ஏக்களான வேல்முருகன், ரூபி மனோகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதே போல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தை பார்வையிட்டு தொழிற்சாலைகள் நிறைந்த இப்பகுதியில் தீ விபத்துக்கள் போன்ற விபத்துக்கள் ஏற்பட்டால் அதனை தடுப்பதற்கும் மீட்பு பணிகளுக்கும் போதுமான தீயணைப்பு வாகனங்கள் மற்றும் கருவிகள் உள்ளதா என்பது குறித்தும் தீயணைப்பிற்கு கையாளும் முறைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

தொடர்புடைய செய்தி