புகை மாசு விழிப்புணர்வு பேரணி - அமைச்சர் பங்கேற்பு

57பார்த்தது
புகை மாசு விழிப்புணர்வு பேரணி - அமைச்சர் பங்கேற்பு
சென்னை(கி) மாவட்ட பாரத சாரண சாரணியர் இயக்கம் மற்றும் ஆலடி அருணா அறக்கட்டளை சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட "புகை மாசு விழிப்புணர்வு பேரணி" நிகழ்வை ராயபுரம் தனலட்சுமி மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர், புகையால் ஏற்படும் தீங்குகள் குறித்தும், இயற்கை வளத்தைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பேரணியைத் தொடங்கியுள்ள மாணவச் செல்வங்களின் நோக்கம் வெற்றியடைய வேண்டும். இயற்கையைக் காப்போம்! ஆரோக்கியமான உலகை வளர்ப்போம்! என கூறியுள்ளார்.