காங்கிரஸின் 'கையோடு கை கோர்ப்போம்' பயணம் தொடக்கம்

70பார்த்தது
காங்கிரஸின் 'கையோடு கை கோர்ப்போம்' பயணம் தொடக்கம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, 'கையோடு கை கோர்ப்போம்' பயணத்தை அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ தொடங்கி வைத்தார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று ராஜிவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கதன் சார்பில் தமிழகத்திற்கான மேலிடப் பொறுப்பாளர் இனாமுல் ஹசன் தலைமையில் நடைபெறவுள்ள பயணம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ, மாநில துணைத்தலைவர் சொர்ண சேதுராமன், அமைப்பு பொறுப்பாளர் ராம் மோகன், மாநில பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி