சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது புகார்!

66பார்த்தது
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது புகார்!
உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்துகொண்டு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் செயல்படுவதாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி புகார் அளித்துள்ளார். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, மற்றவர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் வேறு சிலர் படுத்து உருளுவது சரியே என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி