15 வயது சிறுமி மயக்கமருந்து கொடுத்து பலாத்காரம்

1082பார்த்தது
15 வயது சிறுமி மயக்கமருந்து கொடுத்து பலாத்காரம்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டை அடுத்த விருவீடு அருகேவுள்ள வளையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நிதிஷ் (23). இவர் அந்தப் பகுதியில் உள்ள 15 வயது சிறுமியை ஒருவரை குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, மயக்க நிலையில் இருந்த போது, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இளைஞரை போச்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி