கோவை; சிறுத்தையை பிடிக்க கூண்டு

80பார்த்தது
கோவை; சிறுத்தையை பிடிக்க கூண்டு
கோவை வனச்சரகம் தடாகம் பிரிவு போலுவாம்பட்டி பிளாக் கெம்பனூர் சுற்றுக்கு உட்பட்ட கெம்பனூர் முதல் அட்டுக்கல் பகுதியில் உள்ள அட்டுகல் பெரும்பள்ளம் அருகே கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பக அரசு வன கால்நடை அலுவலர் தலைமையில் வனச்சரக அலுவலர், வனவர் மற்றும் சரக பணியாளர்கள் ஆகியோர் சிறுத்தையை பிடிப்பதற்காக கூண்டு வைத்துள்ளனர். மேலும் சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி