லயன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் 324D சார்பில் மரம் நடும் விழா

76பார்த்தது
லயன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் 324 டி மாவட்டம் சார்பில் மகாலட்சுமி என்கிளேவ் குடியிருப்போர் சங்கம் மற்றும் லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் ஜுபிடர் இணைந்து மரக்கன்றுகள் நடும் விழாவை கோவைப்புதூர் வி எல் பி கல்லூரி அருகே உள்ள மகாலட்சுமிபுரம் பகுதியில் நடத்தியது. லயன்ஸ் மரம் நடும் நிகழ்வின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரிமா ஆர். ராஜேந்திரன் தலைமையில் மரம் நடும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆளுநர் சண்முகசுந்தரம், நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன், 97 ஆவது வார்டு கவுன்சிலர் ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட ஆளுநர் ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டு மரம் நடும் விழாவினை தொடங்கி வைத்தனர். இதில், 30க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் மகாலட்சுமி நகர் பகுதியில் நடப்பட்டது.

இந்நிகழ்வில், அரிமாக்கள் ஆனந்த், ராஜேஷ், ஆறுமுகம், பாலசுப்பிரமணியம், கிரி, ராஜீவ், சந்திரசேகர், பாலசுப்பிரமணி, மது, ராதிகா மற்றும் மகாலட்சுமி என்கிளேவ் குடியிருப்போர் சங்கத்தின் தலைவர் சந்திரசேகரன், செயலாளர் சாபுராஜன், பொருளாளர் தீனதயாளன் மற்றும் மகாலட்சுமி என்கிளேவ் பகுதி மக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் ஜூபிடர் தலைவர் அரிமா டி. ஜி. எஸ் பொன்னம்பலம் செய்திருந்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி