இந்தியாவின் இளைஞர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் கவனம் செலுத்தும் விதமாக கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள SSVM பள்ளியில் டிரான்ஸ்பார்மிங் இந்தியா conclave 2024 எனும் கருத்தரங்கம் நடைபெற்றது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கை விண்வெளியில் பறந்த முதல் இந்தியரான ராகேஷ் சர்மா கலந்து கொண்டு தொடங்கி வைத்தார் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய முன்னாள் இந்திய விண்வெளி வீரர், விண்வெளி பயணங்கள் நாம் பூமிக்கு அப்பால் செல்லும்போது நம் பிரபஞ்சத்தை ஆராய்வது மட்டும் அல்லாமல் மனித ஆற்றலின் எல்லைகளை தள்ளுகிறோம். விண்வெளி ஆய்வு என்பது அறிவியல் முயற்சியை விட அதிகம். இது நமது இடைவிடாத அறிவின் நாட்டத்திற்கும் மனித குலத்தை உயர்த்துவதற்கான ஒரு சான்று என பேசினார்.