பாலியல் கொடுமை செய்த நபர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

83பார்த்தது
பாலியல் கொடுமை செய்த நபர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!
கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை சூலூர் பகுதியைச் சிவகுமார் (40) என்பவர் மீது கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் அவர்களால் வழக்கு பதிவு செய்து மேற்படி நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேற்கண்ட நபரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அவர்கள் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர்கள் மேற்கண்ட நபர் பாலியல் குற்றவாளி என உறுதி செய்து சிவகுமார் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி