தப்பி ஓடிய வழிப்பறி கொள்ளையன் கைது !

83பார்த்தது
தப்பி ஓடிய வழிப்பறி கொள்ளையன் கைது !
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பீடம்பள்ளி பகுதியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனுடைய தலையில் வெட்டி அவனின் செல்போனை 3 பேர் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அச்சம்பவத்தில் தொடர்புடைய தமிழ்ச்செல்வன் மற்றும் ஐயப்பன் ஆகியோரை கடந்த சனிக்கிழமை கைது செய்த சூலூர் காவல்துறையினர், தப்பியோடிய கண்ணனை தேடி வந்தனர்.

கண்ணம்பாளையம் சாலையில் தப்பியோடிய கண்ணனை துரத்திச் சென்ற போது பள்ளத்தில் விழுந்த அவனுக்கு கை முறிவு ஏற்பட்டது. கண்ணனை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி இன்று சிறையில் அடைத்தனர். கண்ணன் மீது ஏற்கனவே சூலூர் காவல்துறையில் வழிப்பறி வழக்கு நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி