கோவை வடவள்ளி, வீரகேரளம் பகுதியில் போலீசார் நேற்று (ஜனவரி 30) சோதனை மேற்கொண்டனர். அப்போது வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த குமரேசன்(57) என்பவர் குட்கா மற்றும் கர்நாடக மது பாட்டில்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது, கர்நாடகாவில் இருந்து லாரியில் மது பாட்டில்கள் வருவதாகத் தெரிவித்தார்.
தகவலின் அடிப்படையில், போலீசார் நீலம்பூர் பகுதியில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்றில், மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, லாரியில் இருந்த, 517 கர்நாடக மது பாட்டில்களை, போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தி வந்த மதுரையைச் சேர்ந்த ரங்கநாதன்(50), திருப்பூரைச் சேர்ந்த சதீஷ்பாபு(43), பீகாரைச் சேர்ந்த விஷ்வநாத் குமார்(20) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.