ஸ்லீப்பர் பஸ்களை வாடகைக்கு எடுக்க முடிவு

56பார்த்தது
ஸ்லீப்பர் பஸ்களை வாடகைக்கு எடுக்க முடிவு
தமிழகத்தில் கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், சொந்த ஊர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சிறப்பு பஸ்களை தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் இயக்க திட்டமிட்டுள்ளது. பயணிகள் கூட்டம் அலைமோதும் என்பதால், தனியாரிடம் இருந்து 20 ஏசி அல்லாத ஸ்லீப்பர் பஸ்களை வாடகைக்கு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவை சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி