முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

70பார்த்தது
மதுக்கரை சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண குரு பாலிடெக்னிக் கல்லூரியில் 1996ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 100 பேர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், ஸ்ரீ நாராயண குரு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் உதயகுமார் வரவேற்புரை வழங்கினார் துணை முதல்வர் கௌசல்யா தேவி வாழ்த்துரை வழங்கினார்.

இதில், முன்னாள் ஆசிரியர்களாக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்ற ஸ்ரீ நாராயண குரு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பாலசுந்தரம், துணை முதல்வர் ராஜன், ஆசிரியர் லோகநாதன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினர். இதில் துறைத் தலைவர் கவுசல்யா தேவி, ஆசிரியர்கள்
சிவபிரகாஷ், முல்லர், வாசுமதி, முகம்மது கவுஸ்கான், ஜோப்பி ஜான், அன்பரசன், அங்குசமி, ஹேமலதா, மஞ்சு, மஹாலக்ஷ்மி, சக்திவேல், மனோகரன், கல்யாணி விசுவலிங்கம், கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு முன்னாள் மாணவர்கள் சார்பாக நினைவு பரிசுகள் வழங்கி கெரவித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை முன்னாள் மாணவர்கள் ஆர். விஜயநாராயணா, எம். வசந்த், மதன கோபால், பிரகாஷ் குமார், மணிவண்ணன், டி. சுரேஷ் குமார், முகமது ஷஃபி, நாகூர் மீரான், விஜயராகவன், ஜி. எம். சண்முகசுந்தரம், கே. எம். செந்தில் குமார் ஆகியோர் ஒருங்கிணைத்தினர்.

தொடர்புடைய செய்தி