கஞ்சா விற்ற வாலிபர் சிக்கினார்

57பார்த்தது
கஞ்சா விற்ற வாலிபர் சிக்கினார்
கோவை போத்தனூர் போலீசார் நேற்று ரோந்து பணி சென்றனர். அப்போது அங்குள்ள காலி இடத்தில் சந்தேகம் படும்படி நின்றிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். சோதனை செய்ததில், அவர் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்ற வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த முகமத் தஸ்தாகீர்(26) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி