விசிகவினர் மோதல் - போலீசார் தடியடி

35337பார்த்தது
கடலூர், புவனகிரி அருகே திருமாவளவன் பிரச்சார வாகனத்திற்கு முன்பு விசிகவினர் பயங்கர மோதலில் ஈடுபட்டனர். கஸ்பா ஆலம்பாடி மற்றும் நத்தமேடு பகுதிக்கு வந்து செல்ல வேண்டும் என திருமாவளவனிடம் அப்பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் தெரிவித்தனர். நேரமாகிவிட்டதால் வேறு ஒரு நாள் வருவதாக திருமாவளவன் தெரிவித்த நிலையில் அவரது வாகனம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஜெயங்கொண்டான் மற்றும் ஆலம்பாடி நத்தமேடு இளைஞர்களுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் போலீசார் தடியடி நடத்தினர்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி