கஞ்சா போதையில் காவலர் குடும்பத்தை தாக்கிய கும்பல்

590பார்த்தது
கஞ்சா போதையில் காவலர் குடும்பத்தை தாக்கிய கும்பல்
சென்னை மயிலாப்பூர் சஞ்சீவி தெருவை சேர்ந்த காவலர் ஆனந்த்(31). நேற்று இரவு தனது குடும்பத்துடன் காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நியூ ஆவடி சாலையில் கஞ்சா கும்பல் ஒன்று அவரது காரை வழிமறித்து, கண்ணாடியை கல்லால் அடித்து நொறுக்கியது. இதை தட்டி கேட்ட ஆனந்த், அவரது மனைவி மோனிகா மற்றும் மைத்துனரையும் உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த அவர்களை அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில் விஜயகுமார்(19), சரத்குமார்(25), பிரவீன்(23), ஜோஷ்வா(24), யுவராஜ்(22) மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி