மத்திய அரசை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா போராட்டத்தில் இறங்கியுள்ளார். கர்நாடகாவுக்கு, மத்திய அரசு சமமான நிதிப்பங்கீட்டை வழங்கவில்லை என குற்றம்சாட்டி அவரது தலைமையில்
போராட்டம் நடந்துவருகிறது. இந்த போராட்டத்தில் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்,
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.,க்கள் கலந்துகொண்டுள்ளனர். டெல்லியில் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றுவரும் சூழலில் கர்நாடக ஆளும் கட்சி
போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது