பழனி: மயில் வாகனத்திற்கு சிறப்பு பூஜை

63பார்த்தது
பழனி: மயில் வாகனத்திற்கு சிறப்பு பூஜை
திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி, கேரளா, புதுச்சேரி, கர்நாடகாவில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். விழாக்காலங்கள் தவிர செவ்வாய், வெள்ளிக்கிழமைகள், வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகம் இருக்கும். அந்த வகையில், ஸ்ரீ அண்ணாமலையார் உண்ணாமலை நாயகி அறக்கட்டளை சார்பாக நேற்று மயிலுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மயில் வாகனத்திற்கு அலங்காரம் செய்யப்பட்டு பக்தி பாடல்கள் பாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அறக்கட்டளையின் சார்பில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :