உதகையில் மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு

84252பார்த்தது
உதகையில் மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு
உதகையில் கட்டுமானப் பணியின் போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 7 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உதகை காந்தி நகரில் வீடு கட்டும் பணியின்போது மண் சரிவு ஏற்பட்டது. இதில் 6 பெண் தொழிலாளர்கள், ஒரு ஆண் தொழிலாளர் என மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது. உயிரிழந்தவர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உதகையில் ஏற்பட்ட இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி