ப்ளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை

601பார்த்தது
ப்ளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள தோப்பூரைச் சேர்ந்தவர் செல்வகுமார் மகன் திவாகர் (18). இவரும் 17 வயது நிரம்பிய 12ஆம் வகுப்பு பள்ளி மாணவியும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் மாணவியை தனியாக வயல்வெளிக்கு அழைத்து சென்று கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதே போல இரண்டு முறை செய்துள்ளார். இதனையடுத்து மாணவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மருத்துவமனை சென்று பெற்றோர்கள் பரிசோதனை செய்ததில் அவர் 5 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து போலீசார் திவாகரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி