இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொரு மாணவர் பலி

59பார்த்தது
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொரு மாணவர் பலி
அமெரிக்காவில் படிக்கும் இந்திய மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்களின் உயிரிழப்பு கவலை அளிக்கிறது. சமீபத்தில், இந்தியானாவில் உள்ள பர்டூ பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படித்து வந்த சமீர் காமத் (23) சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்தார். இயற்கை சரணாலயத்தில் அவர் சடலமாக கிடந்ததாக அதிகாரிகள்
தெரிவித்தனர். அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. தடயவியல் பிரேத பரிசோதனைக்கு பிறகே இது குறித்து தெளிவுபடுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.