செஸ் ஒலிம்பியாட்: 5வது வெற்றியை பதிவு செய்த இந்தியா

74பார்த்தது
செஸ் ஒலிம்பியாட்: 5வது வெற்றியை பதிவு செய்த இந்தியா
45 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நேற்று (செப்.15) நடந்த 5ஆவது சுற்றில் இந்திய ஆண்கள் அணி அஜர்பைஜானை தோற்கடித்தது. இதன் மூலம் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆண்கள் அணி தொடர்ந்து 5ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது. பெண்கள் பிரிவில் இந்திய அணி 2.5-1.5. என்ற கணக்கில் கஜகஸ்தானை தோற்கடித்தது. பிரக்ஞானந்தா மற்றும் விடித் குஜராத்தி ஆகியோர் தங்களது ஆட்டத்தை டிரா செய்தனர்.

தொடர்புடைய செய்தி