மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு வழங்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தண்ணீர் இல்லாமல் வாடும் பயிர்கள் இருக்கும் இடங்களுக்கு தண்ணீர் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். கரும்பு, வாழை, தென்னை போன்றவை பலத்த காற்றால் சேதமடைவது வேதனை அளிக்கிறது என்று தெரிவித்த அவர், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.