மீனவர் கொலை: வாலிபர் கைது

79பார்த்தது
மீனவர் கொலை: வாலிபர் கைது
பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேசப்பன், 51. மீன்பிடி தொழில் செய்து வந்தார். வீட்டின் அருகே உள்ள துலக்கானத்தம்மன் கோவில் திருவிழாவில் கடந்த 2ம் தேதி கலந்து கொண்டார்.


அப்போது பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த பரத், 28 என்பவர் நடனமாடியபடி, சத்தமிட்டு ரகளை செய்துள்ளார். இதை தட்டிக்கேட்டபோது, பரத் ஆத்திரமடைந்து, தேசப்பனை தாக்கி கீழே தள்ளி உள்ளார். தேசப்பனின் சகோதரியும் தாக்கி தப்பினார்.

தலையில் பலத்தகாயமடைந்த தேசப்பன், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இரவு உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பட்டினப்பாக்கம் போலீசார், பரத்தை நேற்று கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி