புதிய ரேசன் கார்டு: மின் கட்டண பில் கட்டாயம்

71பார்த்தது
புதிய ரேசன் கார்டு: மின் கட்டண பில் கட்டாயம்
அரசின் மகளிர் உரிமைத்தொகை பெற, ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள், புது ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம் அளிப்பதால், இதை தடுக்க மின் கணக்கீடு அட்டை, சொத்து வரி ரசீது ஆவணங்களை சமர்ப்பிக்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பொது வினியோக திட்ட இணையதளத்தில், புது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, திருமணச் சான்று, சமையல் காஸ் சிலிண்டர் ரசீது, 'ஆதார்' எண் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பின், விண்ணப்பதாரரின் முகவரியில் உணவு வழங்கல் அதிகாரிகள் ஆய்வு செய்து, தனி சமையல் அறையுடன் வசிப்பதை உறுதி செய்து, ரேஷன் கார்டு வழங்க பரிந்துரை செய்வர். இதையடுத்து, ரேஷன் கார்டு வழங்க ஒப்புதல் அளிக்கப்படும். இந்த பணிகள், 30 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்.

தமிழக அரசு மகளிருக்கு மாதம், 1, 000 ரூபாய் வழங்குகிறது. இதற்காக, ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டு, அரசு விதித்த நிபந்தனைக்கு உட்பட்டு, பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த உதவித் தொகையை பெறுவதற்காக, பலரும் புது கார்டுக்கு விண்ணப்பித்து வருவதால், பல மாதங்களாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை.

தொடர்புடைய செய்தி