வேளச்சேரி - Velachery

ரூ. 2 கோடி தங்கம் பறிமுதல்: 3 பேர் கைது

ரூ. 2 கோடி தங்கம் பறிமுதல்: 3 பேர் கைது

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவதாக நேற்று முன்தினம் சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது துபாயிலிருந்து வந்த தனியார் விமானத்தில் சென்னையைச் சேர்ந்த 30 வயது ஆண் பயணி ஒருவர், துபாய்க்கு சுற்றுலா சென்றுவிட்டு சென்னை திரும்பி வந்தார். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு, அவரை நிறுத்தி அவருடைய உடமைகளை சோதித்தனர். அதில் அவர் அணிந்திருந்த ஷூக்கள் வழக்கத்தை விட அதிக கனமாக இருந்தது. அதனை பிரித்துப் பார்த்தபோது, அதனுள் தங்கப்பசை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அதில் 1. 3 கிலோ தங்கப்பசை இருந்தது, அதன் சர்வதேச மதிப்பு ரூ. 85 லட்சம். இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், அந்த பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கிலிருந்து தனியார் பயணிகள் விமானம் சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையைச் சேர்ந்த 40 வயது பெண் பயணி ஒருவர், சுற்றுலா பயணியாக தாய்லாந்து நாட்டுக்கு சென்று விட்டு திரும்பி வந்தார். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு, அவரது உடைமைகளை சுங்க அதிகாரிகள் சோதித்தனர். அதற்குள் 350 கிராம் எடையுடைய தங்க செயின்கள் மற்றும் வளையல்கள் இருந்தது

வீடியோஸ்


சென்னை