12 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

73பார்த்தது
12 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை
தடையில்லாமல் குடிநீர் வழங்க, கோடைகால குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க 12 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா காணொலியில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கோடைகாலத்தில் குடிநீர் பற்றாக்குறையை சமாளித்து தடையில்லாமல் குடிநீர் வழங்குவது குறித்து ஆலோசனை; சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சீராக குடிநீர் வழங்குவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படுகிறது. தடையில்லாமல், குடிநீர் வழங்குவது மற்றும், கோடைகால குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பது குறித்து, தலைமை செயலாளர், சிவதாஸ் மீனா, ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தலைமை செயலகத்திலிருந்து, காணொளி காட்சி மூலம் பன்னிரண்டு மாவட்ட ஆட்சியர்களுடன் இந்த ஆலோசனையானது மேற்கொண்டுள்ளனர். தட்டுப்பாடின்றி, அனைவருக்கும் கிடைப்பதற்கான, அந்த ஏற்பாடுகளை செய்வதற்காகவும், போதிய அளவில், குடிநீர் இருப்பு இருக்கிறதா? என்பது தொடர்பாகவும், தற்போது, ஆய்வு கூட்டமானது, நடைபெற்று வருகிறது. சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தவாறு, மாவட்ட ஆட்சியர்களுடன், காணொளி காட்சி வாயிலாக, தலைமை செயலாளர், சிவதால் மீனா சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், சென்னையின், குடிநீர் ஆதார இருக்கக்கூடிய ஏரிகளில், போதிய அளவில் நீர், குடிநீ நீர் இருப்பு இருக்கிறதா? என்பது தொடர்பாக, விரிவாக ஆலோசிக்க படுகிறது.

தொடர்புடைய செய்தி