இன்று திமுக பவள, முப்பெரும் விழா: ஏற்பாடுகள் தீவிரம்

81பார்த்தது
திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது. இவ்விழாவில் கட்சியில் சிறப்பாக செயல்பட்டோருக்கான பரிசுகளை முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்கி உரையாற்றுகிறார்.

செப். 15-ம் தேதி முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த தினம், செப். 17-ம் தேதி தந்தை பெரியார் பிறந்த நாள், அதே செப். 17-ம் தேதி திமுக தொடங்கப்பட்ட நாளாகும். ஆகியவற்றை இணைத்து ஆண்டுதோறும் முப்பெரும் விழா திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது. இவ்விழாவில் பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் பெயர்களிலான விருதுகள், கட்சியில் சிறப்பாக செயல்பட்டோருக்கான பரிசுகளை முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்கி உரையாற்றுகிறார்.

செப். 15-ம் தேதி முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த தினம், செப். 17-ம் தேதி தந்தை பெரியார் பிறந்த நாள், அதே செப். 17-ம் தேதி திமுக தொடங்கப்பட்ட நாளாகும். ஆகியவற்றை இணைத்து ஆண்டுதோறும் முப்பெரும் விழா திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

தென்சென்னை மாவட்ட திமுக சார்பில் மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவுக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.

இந்த விழாவில், தமிழகம் முழுவதிலிருந்தும் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், 75 அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சி கொடியை ஸ்டாலின் ஏற்றுகிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி