செந்தில்பாலாஜி அமைச்சராவதற்கு தடை இல்லை: ஆர். எஸ். பாரதி

54பார்த்தது
எதிர்கட்சிகள் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்வதை விட்டுவிட்டு பாஜக திருந்தவில்லை என்றால் பாஜகவுக்கு கேடுகாலம் தான் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி கூறியுள்ளார்.

சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்ட வழக்கில் கைதாகி ஒராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி, செந்தில் பாலாஜி அமைச்சராவதற்கு எவ்வித தடையும் இல்லை எனவும், எந்த விதமான முகாந்திரமும் இல்லாமல் 15 மாத காலம் செந்தில் பாலாஜி சிறையில் இருந்துள்ளார் என்றும் கூறினார்.

பாஜக எதிர்க்கட்சிகள் மீது இதுபோன்று பொய்யான வழக்குகளை ப்பதிவு செய்வதை விடுத்து திருந்த வேண்டும், இல்லாவிட்டால் அவர்களுக்கு கேடுகாலம் தான். செந்தில் பாலாஜி அமைச்சராக நியமனம் செய்யும் முடிவை முதலமைச்சர் எடுப்பார். அமைச்சரவை மாற்றம் குறித்த பதிலை ஏற்கனவே முதலமைச்சர் தெளிவுபடுத்தி உள்ளார் என்றும், கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு தீவிரமாக பணியாற்றக் கூடிய அவரை உள்ளே வைத்துவிட்டால் ஏதாவது செய்யலாம் என நினைத்தார்கள் ஆனால் திமுக இந்தியா கூட்டணி 40/40 வெற்றி பெற்றது என்று தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி