பெரம்பூர் - Perambur

லிங்க்கை தொட்டதும் போனது பணம்: போலீசார் விசாரணை!

லிங்க்கை தொட்டதும் போனது பணம்: போலீசார் விசாரணை!

சென்னை: சூளைமேட்டில் செல்போன் லிங்க் மூலம் பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளைமேட்டில் விஸ்வகுமார் என்பவர் தனது செல்போனுக்கு வந்த லிங்கை கிளிக் செய்தபோது பணம் திருடப்பட்டது. தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 1, 98, 000 திருடு போனதாக விஸ்வகுமார் இன்று(செப்.12) புகார் தெரிவித்தார். ஐஸ் ஹவுஸில் சிவகணேஷ் என்பவரின் கிரெடிட் கார்ட் கணக்கில் இருந்து ரூ. 15, 000 பணம் திருடு போனது தெரியவந்துள்ளது. போலீசார் தரப்பில் தினந்தோறும் ஆன்லைன் மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், மக்கள் மீண்டும் பணத்தை ஆன்லைனில் இழப்பது வாடிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வீடியோஸ்


சென்னை
திருவண்ணாமலை கோயில் கோபுரம் முன் வணிக வளாகம்: ஐகோர்ட் ஆணை
Sep 12, 2024, 16:09 IST/சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி

திருவண்ணாமலை கோயில் கோபுரம் முன் வணிக வளாகம்: ஐகோர்ட் ஆணை

Sep 12, 2024, 16:09 IST
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கோபுரம் முன்பு வணிக வளாகம் கட்டும் திட்டத்தை ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது? என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கிழக்கு கோபுரம் முன்பு ரூ. 6 கோடி செலவில் வணிக வளாகம் கட்ட அறநிலையத்துறை அனுமதியளித்து கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி கோயில் வழிபாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் டி. ஆர். ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ் குமார் மற்றும் சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு இன்று(செப்.12) விசாரணைக்கு வந்தது. அப்போது, வணிக வளாகம் கட்டுமானம் தொடர்பான வரைபடங்களை பார்வையிட்ட நீதிபதிகள், கோயில் முன்பு திறந்த வெளியில் வர்த்தக நடவடிக்கைகளுக்காக வணிக வளாகம் கட்டுவது அவசியம் தானா? என கேள்வி எழுப்பினர். மேலும், ராஜகோபுரம் முன்பு வணிக வளாகம் கட்டும் திட்டத்தை ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது? என்று விளக்கம் அளிக்கும்படி அறநிலைய துறை தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.