மின்வாரிய கேங்மேன்கள் ஆர்ப்பாட்டம்: பிரேமலதா நேரில் ஆதரவு

63பார்த்தது
சென்னையில் மின்வாரிய கேங்மேன்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், சீமான், பிரேமலதா விஜயகாந்த் நேரில் ஆதரவு தெரிவித்தனர்.

கள உதவியாளராக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய கேங்மேன்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பில், சென்னை அண்ணா சாலையில் உள்ளமின்வாரிய தலைமை அலுவலகம் அருகே மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் பங்கேற்று பேசியவர்கள், தமிழ்நாடு மின்வாரியத்தில் 63 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் மின்வாரியம், அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டுவரும் கேங்மேன் பணியாளர்களை உடனடியாக களஉதவியாளராக மாற்ற வேண்டும். குடும்பத்தைப் பிரிந்து 400, 500 கி. மீட்டர் தூரத்தில் பணியமர்த்தப்பட்டு கடுமையான பணிசுமையிலும், மன அழுத்தத்துடனும் பணி மேற்கொண்டுவரும் கேங்மேன் பணியாளர்கள் அனைவரையும் சொந்த ஊருக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.

தொடர்புடைய செய்தி