ராதாகிருஷ்ணன் நகர் - Dr radhakrishnan nagar

சென்னை: கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் - ஆட்டோ ஓட்டுனர் கொலை

சென்னை: கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் - ஆட்டோ ஓட்டுனர் கொலை

சவாரி செல்லும்போது பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் கூறியதால், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவர் கொலை செய்யப்பட்டார்.  சென்னை அண்ணா நகர் எம்ஜிஆர் காலனி நேரு தெருவைச் சேர்ந்தவர் முனியப்பன் (48). ஆட்டோ ஓட்டுநர். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு ஆட்டோ ஓட்டுநருமான செல்வம் (50) என்பவரும், அண்ணா நகர் 11-வது மெயின் ரோட்டில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து ஆட்டோ இயக்கி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் ஆட்டோ ஸ்டாண்டில், முனியப்பனுக்கும், செல்வத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். அப்போது, செல்வம் அருகில் கிடந்த கட்டையை எடுத்து, முனியப்பனின் தலையில் அடித்துள்ளார். பலத்த காயமடைந்த முனியப்பனை அங்கிருந்தவர்கள் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த திருமங்கலம் போலீஸார், செல்வத்தை கைது செய்தனர்.  முனியப்பன் சவாரிக்கு வரும் பொதுமக்களிடம் அதிக பணம் கேட்பதாகவும், இதனால் ஆட்டோ ஸ்டாண்ட்டுக்கு அவப்பெயர் ஏற்படுவதாகவும் செல்வம் புகார் கூறியதால், அவர்கள் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டு, கொலையில் முடிந்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

வீடியோஸ்


சென்னை
பெரம்பூர்: கல்லாப் பெட்டியை திருட்டு - போலீசார் விசாரணை
Jan 06, 2025, 00:01 IST/பெரம்பூர்
பெரம்பூர்

பெரம்பூர்: கல்லாப் பெட்டியை திருட்டு - போலீசார் விசாரணை

Jan 06, 2025, 00:01 IST
தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 3வது தெருவை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (80). கொடுங்கையூர் மீனாம்பாள் சாலை நடைபாதையில் கடந்த 10 ஆண்டுகளாக செருப்பு கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் (ஜன.4) இரவு 9 மணி அளவில் கடைக்கு வந்த 2 பெண்கள் மாறி மாறி செருப்புகளை போட்டு பார்த்து விலை கேட்டுள்ளனர்.  அப்போது செருப்பு வாங்க வந்த மற்றொரு நபரிடம் அப்துல் ரகுமான் செருப்பு வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அதன் பிறகு அந்த 2 பெண்களும் எங்களுக்கு எந்த மாடலும் பிடிக்கவில்லை எனக் கூறி அங்கிருந்து சென்று விட்டனர். அவர்கள் சென்ற உடனே அப்துல் ரகுமான் ஓரமாக வைத்திருந்த கல்லாப்பெட்டியை பார்த்தபோது அது காணாமல் போனது தெரிந்தது. அதில் ரூ. 6,500 இருந்துள்ளது. மேலும் அங்கு வந்த பெண்கள் 2 பேரும் அந்த இடத்தில் வந்து செருப்புகளை மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது.  இதனையடுத்து பணப்பையை அவர்கள்தான் திருடி சென்று உள்ளார்கள் என்பதை உறுதி செய்தகொண்ட அப்துல் ரகுமான் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, அந்த பெண்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.