முதலமைச்சர் கோப்பை போட்டிகளுக்கு முன்பதிவு நிறைவு

57பார்த்தது
முதலமைச்சர் கோப்பை போட்டிகளுக்கு முன்பதிவு நிறைவு
தமிழ்நாடு ‘முதலமைச்சர் கோப்பை -2024’ விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்றுடன் நிறைவடைகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘முதலமைச்சர் கோப்பை - 2024’ விளையாட்டு போட்டிகள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ளது. இதில் 12 முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணவர்கள், 17 முதல் 25 வயது வரையுள்ள கல்லூரி மாணவர்கள், 15 முதல் 35 வயது வரையுள்ள பொது பிரிவினர், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்கவுள்ளனர்.

அதன்படி மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் 27 விளையாட்டுகள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல, மாநில அளவில் நடத்தப்படுகின்றன. இதற்கான ஆன்லைன் முன்பதிவு https: //sdat. tn. gov. in என்ற இணையதளத்தில் கடந்த ஆக. 4ம் தேதி தொடங்கப்பட்டது. விண்ணப்பப் பதிவுகள் ஆக. 25ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், முன்பதிவில் கிடைக்கப்பெற்ற வரவேற்பை தொடர்ந்து கால அவகாசம் செப். 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

அந்த வகையில் முன்பதிவு இன்றுடன் முடிவடைகிறது. முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும். மொத்த பரிசாக ரூ. 37 கோடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ. 75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி