அடுத்த 3 நாட்களில் அடைமழைக்கு வாய்ப்பு!

51பார்த்தது
அடுத்த 3 நாட்களில் அடைமழைக்கு வாய்ப்பு!
இன்று (ஜூன் 1) முதல் 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை 3 நாட்களுக்குள் தொடங்ககும் எனவும் அறிவித்துள்ளது. மேலும், குமரிக்கடல், மன்னார் வளைகுடாவை ஒட்டிய கடலோர பகுதிகளில் வரும் 3 ஆம் தேதி வரையும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை வரை மணிக்கு 55 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி