மழைநீரில் மூழ்கிய கார்.. 3 பேர் பாதுகாப்பாக மீட்பு

59பார்த்தது
தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில் மதுரையில் நேற்று (அக்.12) கனமழை பெய்தது. அதன் காரணமாக மணி நகரம் பகுதியில் மழைநீர் தேங்கியது. இந்நிலையில், ரயில்வே சுரங்க பாதையில் சூழ்ந்த வெள்ள நீரில் காவல் துறை வாகனமும், ஒரு காரும் சிக்கிக்கொண்டது. மேலும், அந்த கார் நீரில் மூழ்கிய நிலையில் அதிலிருந்த மூன்று பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த பதைபதைக்கும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

நன்றி: News18TamilNadu

தொடர்புடைய செய்தி