அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கை மீண்டும் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தினமும் விசாரணை நடத்தி வரும் ஜூலைக்குள் வழக்கை முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மார்ச் 28ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய்க்கு பிணை செலுத்த வேண்டும். உத்தரவுக்கு கட்டுப்பட்டு நேரில் ஆஜராகாவிட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.