பாலியல் புகாரளித்த பெண் மீது துப்பாக்கிச்சூடு

72பார்த்தது
பாலியல் புகாரளித்த பெண் மீது துப்பாக்கிச்சூடு
ராஜஸ்தான் மாநிலம், கோட்புல்லு என்ற நகரில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ராஜேந்திர யாதவ் என்பவர் 25 வயது பெண் ஒருவரை பாலியல் குற்றம் செய்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து சில மாதங்களுக்கு முன்னர் ஜாமினில் வெளியே வந்த அவர் அந்த பெண்ணை வழக்கை வாபஸ் பெறுமாறு மிரட்டியுள்ளார். அதற்கு அடிபணியாத அப்பெண்ணை கொலை செய்ய திட்டமிட்ட அவர், தனது கூட்டாளிகளான மஹிபால் குர்ஜார், ராகுல் குர்ஜார் ஆகியோருடன் இணைந்து துப்பாக்கியால் சுட்டும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியும் கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து இருவரை கைது செய்த போலீசார் ராஜேந்திர யாதவை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி