தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது

66785பார்த்தது
தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது
செக் மோசடி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைதுசெய்யப்பட்டுள்ளார். திரைப்படம் தயாரிக்க தனியாரிடம் ரூ.1.70 கோடி கடன் வாங்கியுள்ளார் சிவசக்தி பாண்டியன், கடன் தொடர்பாக வழங்கிய செக் பணமின்றி திரும்பி வந்ததால் மோசடி வழக்கில் இவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவுப்படி சிவசக்தி பாண்டியனை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். அஜித் நடிப்பில் மாபெரும் வெற்றிபெற்ற 'காதல் கோட்டை' உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி