கர்ப்பிணியை ஏற்றாத பஸ் டிரைவர் சஸ்பெண்ட்

65பார்த்தது
கர்ப்பிணியை ஏற்றாத பஸ் டிரைவர் சஸ்பெண்ட்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துாரிலிருந்து கல்வார்பட்டி சிங்கிலிக்காம்பட்டிக்கு ஜூன் 12ஆம் தேதி அரசுப் பேருந்து சென்றது. பேருந்தை ஓட்டுநர் வேடசந்துார் கிளையில் பணிபுரியும் காசிராஜன் ஓட்டினார். இரவு கர்ப்பிணி ஒருவர் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்து ஏற முயன்ற போது டிரைவர் ஏற்றாமல் சென்றார். இதே போல் இலவசமாக பயணிப்பதால் பேருந்து நிறுத்தத்தில் நின்ற சில பெண்களையும் ஏற்றாமலும் சென்றுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை பாய்ந்துள்ளது.

மாநகர பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம் என அரசின் திட்டம் அமலில் இருக்கும் போது இது போன்ற சம்பவங்கள் மக்களை கோபத்தில் ஆழ்த்தி வருகிறது.

தொடர்புடைய செய்தி