பெட்டி பெட்டியாக மோடி- அண்ணாமலை படத்துடன் வாழ்த்து அட்டைகள்

53பார்த்தது
பெட்டி பெட்டியாக மோடி- அண்ணாமலை படத்துடன் வாழ்த்து அட்டைகள்
சென்னையில் எழும்பூரில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன தணிக்கையில் வேனில் எடுத்துச் செல்லப்பட்ட 17 பெட்டிகளில் இருந்த மோடி, அண்ணாமலை படம் பொறிக்கப்பட்ட வாழ்த்து அட்டைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக விருதுநகரில் கர்நாடகா பதிவெண் கொண்ட இரண்டு கண்டெய்னர் லாரிகளை சோதனை செய்தபோது மோடி படம் பொறிக்கப்பட்ட 40,000 பனியன்களும், தாமரை சின்னம் பொறித்த 1800 சேலைகளும் இருப்பது தெரியவந்தது. அதற்கான ஆவணங்கள் இல்லாததால் 2 கண்டெய்னர் லாரிகளோடு பனியன்கள், சேலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி