ஹைதராபாத்தில் திருநங்கைகள் போல் நடித்து பொதுமக்களை மிரட்டி பணம் பறித்த இருவர் கைது செய்யப்பட்டனர். ஸ்வப்னா குமாரி (37) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரும் திருநங்கைகளை போல உடையணிந்து போக்குவரத்து சிக்னல்கள், மக்கள் கூடும் இடங்களில் மிரட்டி பணம் பறித்தனர், பணம் கொடுக்கவில்லை என்றால் அசிங்கப்படுத்துவோம் என கூறியதால் பலரும் பணம் கொடுத்திருக்கின்றனர். புகாரின் பேரில் இருவரையும் கைது செய்த போலீசார் ரூ.3,490 மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்தனர்.