படகு கவிழ்ந்து விபத்து - 6 பேர் மாயம்

51பார்த்தது
பீகார் மாநிலம் பாட்னாவில் இன்று (ஜூன் 16) கங்கா தசரா விழா நடைபெற்றது. இதனையொட்டி, அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சிலர் கங்கை ஆற்றில் குளித்தனர். பின்னர், அவர்கள் படகில் 17 பேர் ஏறி அந்த ஆற்றைக் கடந்தனர். அப்போது, ​​எதிர்பாராத விதமாக படகு ஆற்றில் கவிழ்ந்து மூழ்கியது. இந்த விபத்தில் 11 பேர் நீந்தி உயிர் தப்பிய நிலையில் 6 பேர் மாயமாகியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், நீரில் மூழ்கியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி