உ.பி., மாநிலம் மதுராவில் பாஜக பிரமுகர், பெண் ஒருவரை துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவரின் செல்வாக்கு காரணமாக உள்ளூர் போலீசார் தனது புகாரை புறக்கணித்ததாக டெல்லி போலீசில் அப்பெண் புகாரளித்துள்ளார். அவர் தனக்கு வேலை வாங்கித் தருவதாகக்கூறி, துப்பாக்கியைக் காட்டி மிரட்டி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பெண் கூறியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் மீது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து, சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.