உண்டியல் திருடன் கைது.. கோயிலுக்கு மட்டும் டார்கெட்

67பார்த்தது
உருளையன்பேட்டை முல்லை நகரில் பிரசித்திப் பெற்ற உலக நாயகி அம்மன் கோயில் உள்ளது. அங்கு கடந்த 31ஆம் தேதி இரவு கோயில் பூட்டை உடைத்து, உள்ளே நுழைந்த திருடன், பீரோ லாக்கரில் இருந்த அம்மன் நெக்லஸ், கம்மல் உட்பட 5 பவுன் நகைகளை திருடியுள்ளான். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் திருடனை தேடி வந்தனர். அதன்பேரில் தற்போது, தொடர் கோயில் திருட்டில் ஈடுபட்டு வந்த கடலூரைச் சேர்ந்த உண்டியல் திருடன் சுகுன்ராஜை கைது செய்தனர். மேலும், கோயிலில் எப்படி திருடினேன் என்பதையும் திருடன் செய்து காட்டியுள்ளான்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி