இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணியின் மறைவு திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புற்று நோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். பவதாரிணியின் உடல் இன்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது. இவரது மறைவிற்கு இயக்குநர் பாராதிராஜா உள்ளிட்ட சினிமா பிரபலங்கள்,
அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.