பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே கடந்த மார்ச் 1 ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பு தொடர்புடைய 2 முக்கிய குற்றவாளிகளை கல்கத்தாவில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் நேற்று (ஏப்ரல் 12) கைது செய்தனா். இதையடுத்து அவர்கள் இருவரும் பெங்களூருக்கு அழைத்து வரப்பட்டனர். மேலும் பெங்களூரில் உள்ள நீதிமன்றத்தில் அவர்கள் இன்று(ஏப்ரல் 13) ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.