தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியாததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மல்லரெட்டிப்பள்ளியை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது உறவினர் பெண்ணை காதலித்து வந்துள்ளார். திருமணத்திற்காக கார்த்திக்கின் பெற்றோரிடம் பேசியபோது, மூத்த மகனுக்கு திருமணம் நடந்த பிறகுதான் இளைய மகனுக்கு (கார்த்திக்) திருமணம் நடத்துவோம் என தெரிவித்தனர். இதனால் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய பெண்ணின் பெற்றோர்கள் முடிவு செய்ததால் கார்த்திக் தற்கொலை செய்து கொண்டார்.